அப்துல் கலாமை சந்தித்த கலைஞர்கள் - ஒரு கான்ட்ராஸ்ட் மீட்டிங்

வெள்ளி, 4 மே 2012 (20:00 IST)
தேசிய விருது பெற்ற தமிழ்‌த் திரையுலக கலைஞர்கள் முன்னாள் குடியரசு தலைவரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

இந்த வருடம் தேசிய விருது பெற்ற கலைஞர்கள் குமாரராஜா, சுசீந்திரன், சற்குணம், அப்புக்குட்டி, எடிட்டர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சா‌ரியிடம் விருது பெற்ற கையோடு அப்துல் கலாமை சந்திக்கச் சென்றனர். அவ‌ரிடம் தங்கள் படங்கள் குறித்து விலாவ‌ரியாக எடுத்துக் கூறினர். விருது பெற்றவர்களுக்கு அப்துல் கலாம் தனது வாழ்த்துகளை தெ‌ரிவித்தார்.

எடுக்கிற படங்கள் மக்களுக்கு பயனுள்ளதாகவும், இளைஞர்களுக்கு எழுச்சித்தரக் கூடியதாகவும் அப்போது அவர் தெ‌ரிவித்தார்.

இவர்கள் வாழ்த்துப் பெற்ற அப்துல் கலாம் சினிமாக்களை ஒருபோதும் விரும்பியதில்லை, அதனால் கடந்த நாற்பது வருடங்களுக்கு மேல் படங்களே பார்த்ததில்லை. இதுதான் எதிர்முரணா?

வெப்துனியாவைப் படிக்கவும்