அனுஷ்கா - சொந்தக் குரலும் தேசிய விருதும்

செவ்வாய், 1 ஜனவரி 2013 (15:10 IST)
FILE
அருந்ததியில் மிடுக்காக கொஞ்சம் குரலுயர்த்தி நடித்ததும் அனுஷ்காவா... இரண்டு மூணு தேசிய விருது வாங்குற அளவுக்கு டேலண்ட் ஆனவராச்சே என்று ஏற்றிவிட்டார்கள்.

காசு சேர்ந்த பிறகு வரவேற்பறையில் இரண்டு விருதும் இருந்தால் கௌரவமாக இருக்கும் என நினைப்பதில் தவறில்லைதான். அதுக்காக அனுஷ்கா தேர்ந்தெடுத்த படம்தான் இரண்டாம் உலகம்.

அனுஷ்காவுக்கு இதில் இரண்டு வேடங்கள். மொத்தமாக நாற்பது நாட்கள் கால்ஷீட் தந்திருக்கிறார். இதெல்லாம் படம் விருது வாங்கித் தரும் என்ற செல்வராகவனின் உத்தரவாதத்தால் அனுஷ்கா செய்தது.

தேசிய விருதுக்கு பரிசீலிக்கப்பட வேண்டுமென்றக்ல் சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருக்க வேண்டும். அனுஷ்காவின் தமிழ் ஆவரேஜ். அவருக்காக வேறெருவர்தான் டப்பிங் பேசி வந்தார்.

விருது சமாச்சாரமாச்சே... இரண்டாம் உலகத்தில் அனுஷ்காவே டப்பிங் பேசவிருப்பதாக கூறுகிறார்கள்.

விருது கிடக்கட்டும், படம் எப்போது வெளியாகிறது?

வெப்துனியாவைப் படிக்கவும்