தமிழ் சினிமாவின் இப்போதைய இன்னொரு பற்றாக்குறை, தயாரான படங்களைப் பார்த்து தரச்சான்றிதழ் தர போதுமான தணிக்கைக் குழு உறுப்பினர்கள் இல்லாதது. இதனால் தணிக்கைக்கு விண்ணப்பித்திருக்கும் படங்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. விண்ணப்பித்த சீனியாரிட்டிபடி மட்டுமே படங்களைப் பார்த்து தரச்சான்றிதழ் தர வேண்டும்.
இது தெரிய வந்ததும் தணிக்கை சான்றிதழுக்கு காத்திருந்த தயாரிப்பாளர்கள் கடுப்பாகிவிட்டனர். பெரிய படங்களால் திரையரங்கு கிடைப்பதில்லை. சென்சாருக்கு வந்தால் இங்கேயும் சிக்கல் பண்றாங்களே, பேசாமல் கோர்ட்டுக்கே போயிடலாமா என்று யோசித்து வருகிறார்கள்.