அஞ்சலி காணாமல் போனதிலிருந்து தொடங்கியது இந்தப் பிரச்சனை. தன்னை தனது சித்தியும், இயக்குனர் களஞ்சியமும் டார்ச்சர் செய்வதாக அஞ்சலி குற்றஞ்சாட்டினார். அஞ்சலியின் இந்தப் பேச்சால் தனது கௌரவத்துக்கு களங்கம் ஏற்பட்டதாகக்கூறி அவர் மீது களஞ்சியம் வழக்குத் தொடர்ந்தார் களஞ்சியம். இவர்களின் சண்டை இன்னும் தீரவில்லை.
ஊர்சுற்றிப் புராணத்தை முடிக்க அஞ்சலி கால்ஷீட் தந்தேயாக வேண்டும் என்கிறார் களஞ்சியம். அவருக்கு கால்ஷீட் தரும் பேச்சுக்கே இடமில்லை என்கிறார் அஞ்சலி. இந்த விவகாரம் இயக்குனர்கள் சங்கத்திடம் வந்திருக்கும் நிலையில், அஞ்சலியிடன் இதுகுறித்து விசாரிக்க இருப்பதாக விக்ரமன் தெரிவித்தார். எந்த ஒரு நடிகரும் பாதியில் படத்திலிருந்து வெளியேற முடியாது. அதனால் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் விக்ரமன்.