அனுஷ்கா தற்போது மூன்று முக்கிய படங்களில் நடித்து வருகிறார். எஸ்.எஸ்.ராஜமௌலியின் மகாபலி, அஜீத் நடிப்பில் கௌதம் இயக்கும் படம், ரஜினியை வைத்து கே.எஸ்.ரவிக்குமார் எடுத்துவரும் லிங்கா. மூன்றும் முக்கிய படங்கள். ஒரு படத்துக்காக இன்னொரு படத்தின் கால்ஷீட்டை அட்ஜஸ்ட் செய்யவும் முடியாது.
அஜீத் படத்தில் சில தினங்கள் நடித்தவர் அதன் பிறகு லிங்கா படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அனுஷ்கா இல்லாத காட்சிகளாக எடுத்து வந்த கௌதம் நாளை முதல் மீண்டும் அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்கிறார். ஆம், லிங்கா படப்பிடிப்பிலிருந்து தற்காலிகமாக தன்னை விடுத்துக் கொண்டு கௌதம் படத்துக்கு கால்ஷீட் தந்துள்ளார் அனுஷ்கா.