இந்திப் படத்தில் நடிக்க வேண்டும், பாலிவுட்டை கலக்க வேண்டும் என்பதே நடிக்க வரும் பாதி நடிகைகளின் விருப்பம். வடக்கே இருந்து வந்த தாப்ஸிக்கு இந்த ஆசை சற்று அதிகம் இருப்பதில் ஆச்சரியமில்லை. அவரின் விருப்பத்துக்கு ஏற்ப இந்திப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.
ஏ வெட்னெஸ்டே, ஸ்பெஷல் 26 படங்களின் மூலம் ரசிகர்கள், விமர்சகர்கள் இரு தரப்பின் பாராட்டையும் பெற்றவர் நீரஜ் பாண்டே. இவரின் மூன்றாவது படத்துக்கு லொகேஷன் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. படப்பிடிப்பு தொடங்கும் முன்பே 2015 ஜனவரி 23 படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
தொடர்ந்து இந்தியில் நடித்தாலும், தமிழ், தெலுங்கை புறக்கணிக்க மாட்டேன் என்று தாப்ஸி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.