தொடர் தோல்விகளுக்குப் பிறகு இவர் தயாரித்து இயக்கியிருக்கும் படம், கதை திரைக்கதை வசனம் இயக்கம். ஆக.1 படத்தை வெளியிடுவதாக இருந்தவர் ஜிகிர்தண்டாவும், சரபமும் அதே தேதியில் வெளியானதால் ஆக. 29 -க்கு படவெளியீட்டை தள்ளி வைத்தார். ஆனால் அந்த தேதியில் நான்கு படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. அதனால் ஆகஸ்ட் 15 அஞ்சானுடன் பார்த்திபன் படமும் திரைக்கு வருகிறது.
நல்ல படங்களை தியேட்டரில் வந்து பாருங்கள், திருட்டு விசிடியில் பார்ப்பது எங்கள் இரத்தத்தை உறிஞ்சுவதற்கு சமம், மீறி பார்த்தால் தண்டிக்கப்படுவீர்கள், அதிலிருந்து தப்பித்தால் மரண அடி விழும்... விதி வசத்தால் - என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.