ஒரு அகலமான தட்டில் அரை கப் ரவாவை கலவையில் போட்டு சின்ன வாணலியில் நான்கு ஸ்பூன் நெய்யை நன்றாகக் காய்ச்சி மாவின் மேல் கொட்டி ஒரு ஸ்பூனால் கலக்கவும். நெய்சூட்டில் சர்க்கரை சற்று இளகி உருண்டை பிடிக்க வரும். சற்று சூட்டுடனே உள்ளங்கையில் மாவை வைத்து விரல்களால் அழுத்தி சிறிய லட்டுகளாகப் பிடிக்கவும்.
இதே முறையில் மிகுதிக் கலவையையும் சூடான நெய் விட்டு லட்டுகளாகப் பிடிக்கவும். வாயில் போட்டால் லட்டுகள் கரையும்.