முதலில் பிரட்டை துண்டுகளாக்கி மிக்சியில் போட்டு பொடியாக்கி கொள்ளவும். பிறகு ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, திராட்சை ஆகியவற்றை போட்டு வறுக்கவும்.
பின்னர் அடுப்பை சிம்மில் வைத்து பிரட் தூள், சர்க்கரை போட்டு நன்கு கலந்து சூடானதும் அடுப்பை அணைத்து விடவும். லேசாக சூடு இருந்தால்தான் சர்க்கரை நன்றாகக் கலந்து இருக்கும். அதன் பிறகு துருவிய தேங்காய், ஏலப் பொடி, சேர்த்து நன்றாக கலக்கவும்.