பாலை சுண்டக் காய்ச்சி கோவா பதத்தில் எடுத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் நெய்யை ஊற்றி காய்ந்ததும், (லேசாக புகை வரும் போது) மைதாவை தூவி நன்றாக பொன்னிறமாக வறுக்கவும். கீழே இறக்கி சிறிது நேரம் ஆறவிடவும்.
இதனுடன் கோவாவை கட்டியில்லாமல் உதிர்த்து நன்றாகக் கலந்து வைக்கவும். வேறொரு பாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து, முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, இரட்டை கம்பி பாகு பதம் வந்தவுடன் அதில் மைதா கலவை, ஏலக்காய்த்தூள் தூவி இரண்டு நிமிடம் கிளறி அடுப்பை அணைக்கவும்.