கடலைப் பருப்பு - 1/4 கிலோ தேங்காய் துறுவல் - 1 கப் வெல்லம் சுவைக்கேற்ப மைதா மாவு தேவைக் கேற்ப ஏலப்பொடி உப்பு
செய்முறை:
முதலில் கடலைப் பருப்பை நீர் ஊற்றி பதமாக வேக வைக்கவும்.
பிறகு நீரை கடிகட்டி மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்து எடுக்கவும்.
பின்னர் அதில் தேங்காய் துறுவல், வெல்லம், ஏலப்பொடி, உப்பு முதலியவற்றை போட்டு கையால் கலக்கவும்.
அதன்பின்னர் இக்கவலவையை ஒரு வாணலியில் இட்டு சூடுபடுத்த வேண்டும்.
கலவை கெட்டியாக வரும்போது இறக்கி சிறு சிறு உருண்டடைகளாகப் பிடித்து வைத்துக்கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் மைதாவை தண்ணீர் விட்டு கரைத்து, அதில் பிடித்து வைத்துள்ள கடலைப்பருப்புக் கலவை உருண்டைகளை பஜ்ஜி போடுவது போல் தோய்த்து எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.