கேப்டவுன் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸ் லீடிங் உடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா!

வியாழன், 13 ஜனவரி 2022 (07:30 IST)
கேப்டவுன் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸ் லீடிங் உடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
முன்னதாக இந்திய அணி முதல் இன்னிங்சில் 223 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் பும்ரா மிக அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது இந்திய அணியின் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில் 2 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடரும் என்பதும் இந்த போட்டியில் இந்திய தற்போது 70 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்