எனக்கு விருப்பமில்லை - இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன் - நித்யாமேனன் குமுறல்!

சனி, 30 நவம்பர் 2019 (17:28 IST)
கோலிவுட்டில் காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, மெர்சல் உட்பட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக இருக்கும் நித்யா மேனன் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு  படங்களில் நடித்து வருகிறார். மேலும் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘த அயர்ன் லேடி’யிலும் நடிக்கிறார்.
 
கடைசியாஇவர் மிஷ்கின் இயக்கத்தில் 'சைக்கோ' படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ஓரளவிற்கு நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. இந்நிலையில் சமீபத்தில்  சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நித்யாமேனன் தனது திரையுலக அனுபவங்கள் குறித்து பேசினார். அப்போது, சினிமாவில் நடிக்க ஆரம்பத்தில் தனக்கு விருப்பமில்லை எனவும் ஆனால், தனது  பெற்றோரின் ஆசையாலும் சந்தர்ப்ப சூழ்நிலையாலும் நடிக்க வந்ததாக கூறினார் . 
 
ஆனால், தற்போது இந்த துறையில் இருப்பது பெருமையாக இருக்கிறது என கூறினார். எனவே  தனக்கும் சினிமாவுக்கும் இடையே உள்ள பந்தம் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் போன்றது. திருமணத்திற்கு பிறகு காதல் பிறப்பது போன்றது என நித்யாமேனன் குறிப்பிட்டு கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்