என் மகனை வைத்து சிலர் படம் தயாரிக்க முன்வந்தார்கள். ஆனால், அவர்களே இயக்குனர்களையும் அழைத்து வந்தார்கள். இந்தப் படத்திற்காக தயாரிப்பாளர்களை தேடி அலைந்து கொண்டிருந்த போது, உங்கள் மகனை வைத்து படம் தயாரிக்கும் நீங்களே ஏன் இந்தப் படத்தை இயக்கக் கூடாது என்று மற்றவர்கள் கேட்டனர். அதனால் நானே இந்தப் படத்தை தயாரிக்க முடிவு செய்தேன். கண்ணியமான தயாரிப்பாளர் என்ற பெயரை பெற்றுவிட்டேன். இனி என்னை வெற்றிகரமான தயாரிப்பாளராக்குவது மக்களின் கைகளில்தான் உள்ளது.