இந்நிலையில், பாலிவுட் நடிகர் நானே படேகர் செய்தியாளர் ஒருவரிடம் கூறும்போது “ஒரு படத்தின் கதைதான் சூப்பர்ஸ்டார். படம்தான் சூப்பர்ஸ்டார். ஒரு திரைப்படத்தின் கதை சரியாக அமைக்கப்பட்டிருந்தால், அறிமுக நடிகர்கள் நடித்தாலும் அந்தப் படம் வெற்றி அடையும். அதுவே ஒரு திரைப்படம் மோசமான கதையில் உருவாக்கப்பட்டிருந்தால், எவ்வளவு பெரிய நடிகர் நடித்தாலும், அந்த படத்தை வெற்றி பெறச் செய்ய முடியாது.
பெரிய கதாநாயகர்களுக்காக முதல் 2 அல்லது 3 நாட்கள் மட்டும்தான் ரசிகர்கள் வருவார்கள். ஆனால், படம் சரியில்லை என்றால், கண்டிப்பாக அது தோல்விப்படமாகவே அமையும்” என்று கூறியுள்ளார்.