இலங்கையில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி ரத்து

வியாழன், 7 ஏப்ரல் 2016 (03:14 IST)
இலங்கையில் நடைபெற இருந்த ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

 
நெஞ்சே எழு என்கிற பெயரில் இசை நிகழ்ச்சிகளை ஏ.ஆர்.ரகுமான் நடத்தி வருகிறார். இந்த நிலையில், ஏப்ரல் 23 ஆம் தேதி இலங்கையில் இசை நிகழ்ச்சி நடைபெற இருந்தது.
 
தமிழர்களை கொன்று குவித்த இலங்கையில், இந்த இசை நிகழ்ச்சிக்கு நடத்த கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனையடுத்து, இலங்கையில் நடைபெற இருந்த ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்