‘சன்ரைஸ்’ இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெவால், தாய்லாந்து வீராங்கனை ராட்சானோக்கை எதிர்த்து விளையாடினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 18–21, 21–13, 21–12 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீரர் விக்டோர் ஆக்ஸ்செனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.