உலக பேட்மிண்டன் போட்டி: மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார் சிந்து

வியாழன், 28 ஆகஸ்ட் 2014 (11:36 IST)
டென்மார்க்கில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன் போட்டியில் பி.வி.சிந்து மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆகஸ்ட் 25 முதல் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, மகளிர் ஒற்றையர் பிரிவில் நேரடியாக ரஷ்யாவைச் சேர்ந்த ஓல்காவை நேரடியாக 2 ஆவது சுற்றில் சந்தித்தார். இந்த ஆட்டத்தில் சிந்து 21-12, 21-7 என்ற நேர் செட்டில் ஓல்காவை தோற்கடித்து 3ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜூவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி, சீனாவின் ஒய்ங் டின்-யுன்லி ஷா ஜோடியுடன் மோதியது. இதில் 16-21, 8-21 என்ற நேர் செட்டில் சீனாவின் ஒய்ங் டின்-யுன்லி ஷா ஜோடியிடம் தோல்வியை சந்தித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்