ரியோடி ஜெனீரோவில் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியின் பளுதூக்குதல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க தமிழகத்தின் வேலூர், சத்துவாச்சாரியை சேர்ந்த சதீஷ் குமார் சிவலிங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பெண்கள் பிரிவில் மொத்தம் 192 கிலோ எடையை தூக்கி மணிப்பூரை சேர்ந்த சாய்கோம் மீராபாய் சானு ஒலிம்பிக் தகுதியை பெற்றார். இதில் ஸ்னாட்ச், கிளீன் அன்ட் ஜெர்க் என இரு பிரிவுகளிலும் தேசிய சாதனை படைத்தார் மீராபாய்.
2014-இல் நடைபெற்ற காமென்வெல்த் விளையாட்டில் சதீஷ் குமார் தங்கப்பதக்கமும், மீராபாய் வெள்ளிப்பதக்கமும் வென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார்களா என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.