முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, ரோவ்மன் பவல் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
196 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு, தொடக்க வீரர்கள் ஏமாற்றம் அளித்தாலும், சஞ்சு சாம்சன் நங்கூரம் போன்று நிலைத்து நின்று ஆடினார். வெறும் 50 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 97 ரன்கள் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.