சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நேவால், 7 ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் வாங் இகானை எதிர் கொண்டார். இதில் சாய்னா நேவால், 21-13, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வாங் இகானை எளிதில் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் சாய்னா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.