இந்த சீசனின் முதல் அரைசதம்… ஃபார்முக்கு திரும்பிய கோலி!

சனி, 30 ஏப்ரல் 2022 (17:26 IST)
ஆர் சி பி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இன்றைய போட்டியில் அரைசதம் அடித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் இன்றைய முதல் போட்டியில் RCB மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட் செய்ய வந்த ஆர் சி பி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் கேப்டன் டு பிளஸ்சி சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, இந்த தொடர் முழுவதும் பார்ம் அவுட்டில் இருக்கும் கோலி நிதானமாக விளையாடினார்.

இந்த சீசனின் முதல் அரைசதத்தை அடித்த கோலி 52 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். இதில் 6 பவுண்டரிகளும் 1 சிக்சஸரும் அடக்கம். ஆர் சி பி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்