இந்த ஆண்டு டிசம்பர் 4-வது வாரத்தில் புனேவிலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் நாசிக்கிலும் நடைபெறவுள்ள விளையாட்டு போட்டிகளை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே நடத்த இந்திய பள்ளி விளையாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இது அதிர்ச்சி தரக்கூடிய விஷயமாக உள்ளது. இதற்கு எத்தகைய காரணங்கள் பின்புலத்தில் இருந்தாலும், இது ஜனநாயகமற்றது ஆகும். என்னுடைய உச்சபட்ச கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது அந்தக் காலம். ஆண், பெண் சமநிலையை மேம்படுத்த உலகம் முழுக்க பாலின பாகுபாட்டிற்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில் இந்திய பள்ளி விளையாட்டு ஆணையம் தனது செயலை நியாயப்படுத்த முடியாது.