ஒலிம்பிக்கில் வெல்லும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு பரிசு !

சனி, 24 ஜூலை 2021 (17:36 IST)
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நேற்றுக் கோலாகலமாகத் தொடங்கியது. இதில், இன்று நடைபெற்ற மகளிர் பளுதூக்குதல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட மீராபாய் இப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இவருக்கு இந்திய பிரதமர்  மோடி வாழ்த்துகள் தெரிவித்து பேசினார். இந்திய மக்கள் வீராங்கனை மீரா பாய்க்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெரும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்குப் பரிசு வழங்கப்படும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது,.

இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளதாவது: தங்கம் வென்றால்-ரூ.12.5 லட்சம், வெள்ளி- 10 லட்சம், வெண்கலம் – ரூ. 7.5 லட்சம் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்