பார்சிலோனா அணிக்காக விளையாடும் போது கோல் மழை பொழியும் மெஸ்சி, ஏனோ தன் சொந்த நாட்டிற்காக விளையாடும் தருணத்தில் கோட்டை விட்டு விடுகிறார். இதிலிருந்து மீண்டு வர மெஸ்சி படாதபாடு படுகிறார். இதனால் களத்தில் மிட்பீல்டராக செயல்பட தயார் என மெஸ்சி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மெஸ்சி கூறுகையில், களத்தில் எவ்வித வரிசையிலும் விளையாட திட்டமிட்டுள்ளேன். அனைத்து வீரர்களுக்கும் தன் இறுதி கட்ட விளையாட்டு வாழ்க்கை நெருங்கும் போது இதுபோன்ற சர்ச்சைகளை சந்திக்க வேண்டியுள்ளது என்றார்.