உலக குத்துச்சண்டை போட்டியில் 7 வயது சிறுமி: இந்தியா பெருமிதம்

வியாழன், 28 ஏப்ரல் 2016 (18:37 IST)
நவம்பர் நடைபெறும் சப்-ஜுனியருக்கான உலக குத்துச் சண்டை போட்டியில் இந்தியாவை சேர்ந்த 7 வயது சிறுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 

 
காஷ்மிரைச் சேர்ந்த 7 வயது சிறுமி தாஜாமுல் தனது சிறுவயதிலே குத்துச் சண்டை பள்ளியில் சேர்ந்து பயின்று, அப்பள்ளியிலே சிறந்த மாணவராக திகழ்ந்தார். 
 
மேலும், கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச் சண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்றதன் மூலம் உலக குத்துச் சண்டை போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
 
இதையடுத்து தாஜாமுல், ’உலக குத்துச் சண்டை போட்டியில் கண்டிப்பாக தங்கப் பதக்கம் வெல்வேன்’ என்று கூறியுள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்.....

வெப்துனியாவைப் படிக்கவும்