தேசத்தின் உயரிய விளையாட்டு விருதான கேல் ரத்னா விருதுக்கு இந்த ஆண்டு சானியா மிர்சா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சானியா மிர்சாவை விட கேல் ரத்னா விருதுக்கு தாம் தகுதியானவர் என்று பாரம்லிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி தடகள வீரர் கிரிஷா நாகராஜ கவுடா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், சானியா மிர்சாவுக்கு கேல் ரத்னா விருது வழங்க இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணை முடிவடையும் வரை சானியாவுக்கு கேல் ரத்னா விருது வழங்க கூடாது என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.