உலககோப்பை கபடி போட்டியில் இந்தியா அபார வெற்றி

ஞாயிறு, 16 அக்டோபர் 2016 (11:43 IST)
மூன்றாவது உலககோப்பை கபடி போட்டியில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.


 

 
மூன்றாவது உலககோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி நேற்று இரவு அர்ஜென்டினாவுடன் மோதியது. 
 
அதில் இந்திய அணி 74-20 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் வெற்றி பெற்றது. 54 புள்ளிகள் வித்தியாசத்தில் இந்த அபார வெற்றியை இந்திய அணி பெற்றது. 
 
இந்திய அணிக்கு இது 3வது வெற்றியாகும். ஏற்கனவே ஆஸ்திரேலியா, வங்காளதேசத்தை வென்று இருந்தது. தென் கொரியாவிடம் தோல்வி அடைந்து இருந்தது. இதுவரை 4 ஆட்டத்தில் 3 வெற்றி, 1 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று ‘ஏ’ பிரிவில் 2-வது இடத்தில் இருக்குறது இந்திய அணி.

வெப்துனியாவைப் படிக்கவும்