8 ரன்களில் 2 விக்கெட்டுக்களை இழந்த தெ.ஆப்பிரிக்கா.. ஓப்பனர்களை வீழ்த்திய சிராஜ்

புதன், 3 ஜனவரி 2024 (14:04 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியுள்ள நிலையில் சற்றுமுன் தென்னாப்பிரிக்கா அணி 8 ரன்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்து வருகிறது. 
 
முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டியில்  டாஸ் வென்றதும் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் எல்கர் மற்றும் மார்க்கம் களமிறங்கிய நிலையில் இரண்டு விக்கெட்டைகளையும் இந்தியாவின் சிராஜ் அபாரமாக பந்து வீசி வீழ்த்தினார். 
 
சற்றுமுன் தென்னாப்பிரிக்கா அணி இரண்டு விக்கெட் கடை இழந்து 10 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த இந்தியா இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி அடைந்த தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்