ஃபீல்டிங்கில் இந்தியாதான் நம்பர்-1 : சச்சின் டெண்டுல்கர் புகழாரம்

ஞாயிறு, 29 ஜனவரி 2017 (15:49 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் உலகளவில் சிறந்த பீல்டிங் அணியில் ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்று இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.


 

கொல்கத்தாவில் நாளை நடைபெறவுள்ள மராத்தான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சச்சின் டெண்டுல்கர், ‘‘இந்திய அணியின் பீல்டிங் உலகளவில் சிறந்த பீல்டிங் அணியில் ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். அனைத்து வீரர்களும் பீல்டிங் செய்யும்முறையை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்திய வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமாக பீல்டிங் செய்கிறார்கள்.

வெளிப்புற விளையாட்டில் அக்கறை செலுத்த வேண்டும் என்பதற்கு நான் ஆதரவு அளிக்கிறேன். தற்போதைய தலைமுறையினர் வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர், இன்டர்நெட் போன்ற விஷயத்தில் கவனம் செலுத்துகிறார்கள்.

இவை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கிறது. மக்கள் வெளியில் வந்து சில விளையாட்டுக்களில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இது மக்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்” என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்