சீன டென்னிஸ் வீராங்கனை லீ நா, சில தினங்களுக்கு முன் தனது ஓய்வு முடிவை அறிவித்திருந்த நிலையில் தற்போது, ஓய்வு முடிவால் வருத்தம் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார்.
பின்னர் இதுகுறித்து லீ நா, செய்தியாளர்களிடம் கூறுகையில், டென்னிஸை விட்டு விலக இதுவே சரியான தருணமாகும். இதில் எவ்வித வருத்தமும் இல்லை. டென்னிஸ் வாழ்க்கையை நினைத்து பெருமிதமும் கொள்கிறேன் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.