2012ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இந்தியா சுற்றுப் பயணம் செய்து, 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடியது. அப்போது, மெல்பர்னில் நடந்த முதல் டெஸ்டில் கோலி 11 ரன்னும், 2வது இன்னிங்சில் டக்கவுட்டுமானார்.
சிட்னியில் நடைபெற்ற 2வது டெஸ்டிலும் விராட் கோலி, சாதிக்கவில்லை. அவர் முதல் இன்னிங்சில் 23 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 9 ரன்களும் எடுத்தார்.
எனவே பெர்த்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் கோலியை நீக்கிவிட்டு, அவர் இடத்தில் ரோகித் ஷர்மாவை ஆடச் செய்ய தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளனர். அப்போது டெஸ்ட் அணி கேப்டனாக இருந்த தோனியும், துணை கேப்டனாக இருந்த சேவாக்கும், இந்த முடிவை கைவிட கூறி, கோலியையே தொடரச் செய்துள்ளனர்.