2 -வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து திருவிழா வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற இருக்கிறது. அக்டோபர் 3 ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அட்லெடிகோ டீ கொல்கத்தாவும், சென்னையின் எப்.சி. அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இது குறித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தனுஷ், "இந்தியன் சூப்பர் லீக் போட்டியின் தமிழக தூதுவராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் கால்பந்து மீதான வளர்ச்சியில் என் பங்களிப்பு இருக்கும். இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர், இந்திய கால்பந்து வீரர்களுக்கு உதவியாக இருக்கும் கால்பந்து குறித்த படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்" என்று தனுஷ் தெரிவித்தார்.