ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான சரிதா தேவி, அரையிறுதியில் தென் கொரிய வீராங்கனை ஜினா பார்க்குடன் மோதினார். ஆனால், அரை இறுதியில் தென் கொரிய வீராங்கனை வென்றதாக அறிவிக்கப்பட்டது.
சிறப்பாக செயல்பட்டபோதும் தோற்றதாக அறிவிக்கப்பட்டதால் சரிதா கடும் அதிருப்தி அடைந்தார். இதனிடையே, நடுவர்களின் முடிவை எதிர்த்து இந்தியக் குழு முறையிட்டது. ஆனால், இந்த முறையீட்டு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
குத்துச்சண்டை பதக்கம் அணிவிக்கும் விழாவில் இந்தியா வீராங்கனை சரிதா தேவி கண்ணீர் விட்டு அழுததோடு, வெண்கலப் பதக்கத்தை கழுத்தில் அணியாமல், கையில் வாங்கிக் கொண்டார்.