நேற்றையப் போட்டியில் ஆடம் ஸாம்பா கைகளில் சிறியதாக ஏதோ பொருள் வைத்துள்ளதைப் போன்று புகைப்படம் ஒன்ற் வெளியானது. இதை அடுத்து சமூக வலைதளங்களில் சந்தேகத்துக்குரிய பொருள் என்ன என்று அனைவரும் கேள்வி எழுப்பினர். கடந்த ஆண்டுதான் ஆஸியின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் பால் டாம்பரிங் சர்ச்சையில் சிக்கி ஓராண்டு தடைப் பெற்று திரும்பியுள்ள நிலையில் மீண்டும் பால் டாம்பரிங் சர்ச்சையா எனக் கேள்வி எழுந்துள்ளது.