மாநில ஜிம்னாஸ்டிக் போட்டி: வேலூரில் இனறு துவக்கம்

சனி, 22 ஆகஸ்ட் 2009 (10:30 IST)
வேலூர் மாவட்ட ஜிம்னாஸ்டிக் சங்கம் சார்பில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி ஆற்காட்டில் உள்ள லட்சுமி லோகநாதன் மெட்ரிக் பள்ளியில் இன்று துவங்குகிறது.

மொத்தம் 2 நாட்கள் நடைபெற உள்ள இப்போட்டியில் ஆர்ட்டிஸ்டிக்ஸ் (Artistics) மற்றும் தம்பிளிங் (Thumbling) ஆகிய இரு பிரிவுகளில் ஜுனியர் மற்றும் சீனியர்களுக்காக போட்டிகள் நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் இருந்து 300 வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.

வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஜி.மூர்த்தி, ஆற்காடு நகரமன்ற தலைவர் ஈஸ்வரப்பன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைக்கிறார்கள் என வேலூர் மாவட்ட ஜிம்னாஸ்டிக் சங்க தலைவர் டி.எல்.பாலாஜி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்