ஸ்பெயினின் பில்பாவோ நகரில் நடைபெற்று வரும் 4-வது பைனல் மாஸ்டர் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 9-வது சுற்றில் தோல்வி கண்டார். இதனால் அவர் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
10 சுற்றுகள் கொண்ட இப்போட்டியின் 9-வது சுற்றில் ஆர்மேனியாவின் லெவன் ஆரோன், ஆனந்தைத் தோற்கடித்தார். இதனால் ஆனந்த் 9 புள்ளிகளுடன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டார்.
நார்வேயின் மேக்னஸ் கார்ல்ஸன், உக்ரைனின் இவான் சுக் ஆகியோர் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். 9-வது சுற்றில் கார்ல்ùஸன், இவான்சுக்கை தோற்கடித்தன் மூலம் முதலிடத்துக்கு முன்னேறினார். லெவன் ஆரோன், அமெரிக்காவின் நாகமுரா ஆகியோர் தலா 11 புள்ளிகளுடன் 3-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இன்னும் ஒரு சுற்றே மீதமுள்ள நிலையில், இவான்சுக்கே பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.