உலக பேட்மின்டன்: இங்கிலாந்து விலகல்

ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2009 (16:08 IST)
ஹைதராபாத்தில் திங்களன்று தொடங்கவுள்ள உலக பேட்மின்டன் சாம்பியன் போட்டிகளில் இருந்து, பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்து அணி விலக முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தானைஸ் சேர்ந்த லஷ்கர்-ஈ-தோய்பா தீவிரவாத அமைப்பிடம் இருந்து ஹைதராபாத் பேட்மின்டன் போட்டிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதால், போட்டிகளில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக இங்கிலாந்து பேட்மின்டன் சங்கம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

என்றாலும் இதுகுறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் முன் பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம், பிரிட்டன் தூதரகம் மற்றும் உள்ளூர் காவல்துறையினருடன் ஆலோசனை நடத்தப்படும் என்று பேட்மின்டன் சங்கத்தின் தலைமை நிர்வாகி அட்ரியன் கிறிஸ்டி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்