அமெரிக்காவில் உள்ள ஆக்டெனில் நடைபெறும் உலக இளையோர் வில்வித்தைப் போட்டியில் 3 இந்திய வீரர்கள் ரீகர்வ் மற்றும் காம்பவுண்ட் பிரிவுகளில் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளனர்.
அதே போல் 16 வயதுக்குட்பட்டோர் அணிப் பிரிவில் இந்தியா தகுதிச் சுற்றில் 6-வது அணியாக இடம்பெற்றுள்ளது.
ஆனால் இன்றைய தினத்தில் கொரியாவைச் சேர்ந்த வில்வித்தை வீரர்கள் 3 உலக சாதனைகளை நிகழ்த்தினார்கள்.
இந்தியாவைப் பொறுத்த வரை தனிப்பட்ட போட்டி பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி ரீகர்வ் பிரிவில் 1345 புள்ளிகளுடன் அதிகபட்சமாக 4-வது இடம் பிடித்தார்.