ஆந்திராவுக்கு புதிய தலைநகரம் அமைக்கும் அடிக்கல் நாட்டு விழாவுக்கு இலவச பேருந்து வசதி செய்து தந்தார் ரஜினிகாந்த். அது ஒன்றும் அத்தியாவசியமான உதவியல்ல. அதேநேரம், தமிழக மக்கள் இன்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தலைவர் சொந்தச் செலவில் ஒரு பைபர் போட்டாவது அனுப்பியிருக்கலாம். ஆனால், எங்கயோ யாருக்கோ என்பது போல் இன்னும் கண்டு கொள்ளாமலே இருக்கிறார். விமர்சனங்கள் தீவிரமாகும் போது தலைவர் உதவிகூட செய்யலாம். ஆனால், இவையெல்லாம் கேட்காமலே செய்யக் கூடிய உதவியல்லவா? யாரும் கேட்காமலே ஆந்திரா தலைநகர் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு பேருந்து வசதி செய்துத் தந்தவர், தமிழக வெள்ளப் பாதிக்கு இன்னும் சுண்டு விரலைக்கூட அசைக்கவில்லையே. இது நாம கேட்கலீங்க, மக்கள் பேசிக்கிறாங்க.