தமிழ் சினிமா பாடல்கள் என்றாலே இரட்டை அர்த்த வசனம்தான் முன் நிற்கும். மாந்தோப்பில் நான் நின்றிருந்தேன் என்ற எம்.ஜி.ஆர். பாடலாகட்டும், சமைஞ்சது எப்படி என்ற வாலி பாடலாகட்டும், கல்யாணம்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா சினேகன் சிந்தனை வரிகளாகட்டும்... எல்லாமே 'ஏ' கிளாஸ் வரிகள்தான். அப்பட்டமான உடலுறவை இலைமறைக்காயாக சொல்வதுதான் திரைப்பட பாடல் என்றாகிவிட்டது. விதிவிலக்குகள் நிச்சயம் உண்டு.