பஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது என்ன? ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் பட்சி உண்டா...?

பட்சிகளின் முதன்மை என்றால் அது காகம் தான். ஏன் என்றால் அது தான் பலம் அதிகம் பெற்றது (காலத்தில்). பட்சிகளின் மிகவும் முதனமை என்றால் அது மயில் வலிமை குறைந்தது.
பஞ்சபட்சி பற்றி சித்தர்களில் போகர், அகத்தியர், இராமதேவர், உரோமரிஷி, போன்றோர் நூல்கள் எழுதியுள்ளனர். ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும்  ஒரு பட்சி உண்டு.
 
வல்லூறு: அஷ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம்               
 
ஆந்தை: திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம்                   
 
காகம்: உத்தரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம்.                                
 
கோழி: அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்ராடம்.                              
 
மயில்: திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்ரட்டாதி, ரேவதி.   
 
படுபட்சி நாட்கள்: படுபட்சி என்பது அவருடைய பட்சி செயலிழந்து விடும். இந்நாட்களில் எந்தவித சுபகாரியமும், பிரயாணமும், புதிய  முயற்சிகளும் செய்யக் கூடாது.
 
வல்லூறு – படுபட்சி நாட்கள்
 
வளர்பிறையில் - வியாழன், சனி
 
தேய்பிறையில்  - செவ்வாய்
 
 
ஆந்தை– படுபட்சி நாட்கள்
 
வளர்பிறையில் – ஞாயிறு, வெள்ளி
 
தேய்பிறையில் – திங்கள்
 
 
காகம் – படுபட்சி நாட்கள்
 
வளர்பிறையில் – திங்கள்
 
தேய்பிறையில் – ஞாயிறு
 
 
கோழி – படுபட்சி நாட்கள்
 
வளர்பிறையில் -  செவ்வாய்
 
தேய்பிறையில்  -  வியாழன், சனி
 
மயில் – படுபட்சி நாட்கள்
 
வளர்பிறையில் - புதன்
 
தேய்பிறையில் – புதன், வெள்ளி
 
பட்சியின் நட்சத்திற்குரியோர் உரிய காலத்தை அறிந்து செயலை துவங்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்