தனித்தத்துவங்கள் உள்ள அன்னையின் ஒன்பது வடிவங்கள் !!

அன்னை ஒன்பதுவடிவமாக அன்பர்களால் பார்க்கப்படுகிறாள். அன்னையின் இந்த ஒன்பது வடிவங்களுக்கும் தனித்தனி தத்துவங்கள் உள்ளன.

முதலாவது உருவம் - “மனோன்மணியாகும்”இதன் தத்துவம் பக்குவப்பட்ட ஜீவாத்மாக்களின் பாவங்களை கழுவி,களைந்துபரமாத்மாவோடு இணைப்பதாகும்.
 
இரண்டாவதாக சொல்லப்படும் உருவம்  - "சர்வபூதாமணி" என்ற உருவத்தோற்றம் உயிர்களோடு ஒன்றி கலந்து அதன் பாவங்களை விலக்குவதாகும்.
 
மூன்றாவது - பூமியில் விஷக்கிருமிகள் பெருகாமல் சூரியசக்தியால் நல்லவைகளை வளரச்செய்யும் "பலபிரதமணி" உருவமாகும்.
 
நான்காவது - சந்திரனில் இருந்துகிடைக்கும் காந்தசக்தியைக் கொண்டு பயிர் பச்சைகளை, உயிர் இனங்களை தழைத்தோங்கச்செய்யும் "பலவிகரணி" வடிவாகும்.
 
ஐந்தாவதாக - வானத்தில் உள்ள எல்லா பொருட்களையும் ஏற்று நின்று அவைகள் தன்னில் கலக்கசெய்யும் "கலவிசரணி" உருவமாகும்.
 
ஆறாவதாக - காற்றில் பிரணவமாய் நிற்கும் "காளி".
 
ஏழாவதாக  - நெருப்பில் வெப்பமாய் நின்று உயிர்வளரச்செய்யும் "ரௌத்ரி"
 
எட்டாவதாக - தண்ணீரில் குளிர்ச்சியையும், ஜீவசக்தியையும் நிலைபெற செய்யும் "சேஸ்றா".
 
ஒன்பதாக - ஐம்பூதங்களையும் ஆட்சிசெய்யும் "வாமை".
 
இந்த நவசக்தியரைக் குறிக்கும்வகையில்தான் பெண் குழந்தைகளுக்கு ஒன்பது புனித பொருட்களான வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், அட்சதை, சீப்பு, தோடு,கண்ணாடி வளையல்கள், ரவிக்கை ஆகிய 9 பொருட்களையும் தட்சிணையுடன் வைத்து கொடுத்து அன்னமிடுகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்