சந்தான கணபதி ஹோமத்தின் பலன்கள்...!

சந்தான கணபதி ஹோமத்திற்கு வழிபட வேண்டிய தெய்வம்: கணபதி, லட்சுமி இரண்டு கலசங்களில் ஆவாகனம் செய்து மலர் மாலை அணிவித்து கருப்பு  திராட்சை பழத்தால், வெண்ணை பரப்பிய தட்டில் கணபதி யந்திர கோலமிட்டு சிவப்பு மலர்களால் அர்ச்சித்தல் வேண்டும். அறுகோணமாக குண்டம் அமைத்து  கோலம் இட வேண்டும்.
பொருத்தமான நாட்கள்: வளர்பிறை சதுர்த்தி. செவ்வாய் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 1/2 மணி முதல் 6 மணி வரை சுபமுகூர்த்த வேளை.
 
ஹோமம் பொருட்கள்: தாமரை மலர் நவசமித்து, நவதான்யம் கருங்காலி தேவாரு, சந்தனத் தைலம், 108 வகையாகப் பொருள், ரவா கொழுக்கட்டை, அப்பம், வடை, ஐந்து வகை பழங்கள், பசு நெய் ஆகியன. 
 
நிவேதனங்கள்: பால் சாதம், வெண் பொங்கல், பால், கொழுக்கட்டை புட்டு, அதிரசம், எள்ளுருண்டை, சத்துமாவு கலந்த அஷ்டதிரவியங்கள் கலவை.
 
பலன்கள்: குழந்தை பேறுக்கான தடை நீங்கும். கருக்காலக் கோளாறு, மலட்டித்தன்மை விலகி குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூஜை செய்த பழத்தை  கணவந்-மனைவி இருவரும் சாப்பிட வேண்டும்.
 
மூலமந்திரம்: 
 
ஓம் ஸ்ரீ க்லீம் ஐம்சந்தான கணபதியே ஸ்வாஹா.
ஓம் ஸ்ரீ கணேசாய ஹஸ்தி பிசாசிலிகே கேஸ்வாஹா, 
ஓம் கம் கணபதியே சர்வ குல வார்த்தனாய ல்ம்போதராய 
ஹ்ரீம் கம் நம ஸ்வாஹா
 
கடைசியில் கணபதி சோடச நாமத்துதி வழிபாட்டுப் பாடல் பாடவேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்