வீட்டில் உள்ள கெட்ட சக்திகளை விரட்டும் வெண்கடுகு சாம்பிராணி!!

நம் வீட்டில் உள்ள கெட்ட  சக்திகளை விரட்டும் சக்தி கொண்டது. இதனை சாம்பிராணி பொருட்களுடன் சேர்த்து சாப்பிராணி போடலாம். வெண்கடுகு, சாம்பிராணி, அடுப்புக்கரி இவற்றை, நெருப்பில் புகைப்பதால் கண் திருஷ்டி ஓடிவிடும்.
வெள்ளைக் கடுகை சாப்பிராணியுடன் புகைப்போட்டு, வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் எடுத்துச் சென்று அந்தப் புகையைக் பரவ  விடவேண்டும். 
 
வீட்டில் உள்ள அனைவருக்குமே உடல் நல பாதிப்பு, கண் திருஷ்டி, துஷ்ட சக்திகள் வராமல் இருக்க, நோய் நொடி பாதிப்புக்கள் வராமல் தடுக்க இந்த சாம்பிராணியை போடுவதால் நேர்மறை ஆற்றல் பரவும்.
 
இந்த சாம்பிராணி புகையை இதனை சாமி படங்கள் உள்ள இடத்தில் காட்டுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் மூலை முடுக்குகளில் உள்ள  கெட்ட சக்திகளை ஓட்டலாம், இதனை பூஜை அறையில் காட்டுவதை தவிர்க்கவேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்