முருகனின் ஆறுபடை வீடுகள் என்னென்ன தெரியுமா...?

முருகனுக்கு உகந்த நாளாக கிர்த்திகை தினம் உள்ளது. கிருத்திகை தினத்தை முன்னிட்டு தமிழகத்திலுள்ள பல்வேறு முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும்  வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். 


பழநி: பழநி ஆறுபடைவீடுகளில் முதலாவதாகும். ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன் பெற்றோர்களிடம் கோபம்கொண்டு முருகன் ஆண்டியின் கோலத்தில்  நிற்கும் இடமே பழநி.
 
திருச்செந்ததூர்: கடல் அலை 'ஓம்' என்ற ரீங்காரத்துடன் கரை மோதும் 'அலைவாய்' என்னும் திருச்செந்தூர் முருகன், சூரபத்மன் என்ற அசுரனுடன் போரிட்டு வென்ற இடமாகும்.
 
திருப்பரங்குன்றம்: தேவேந்திரனையும், தேவர்களையும் சிறை மீட்டதற்கு நன்றிக் கடனாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்துகொடுக்கிறான். முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்த இடம் திருப்பரங்குன்றம்.
 
சுவாமிமலை: தந்தைக்குப் பாடம் சொன்ன இடம் சுவாமி மலை.
 
திருத்தணி: முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல் மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி.
 
பழமுதிர்ச்சோலை: குறிஞ்சிக் கடவுளாகிய முருகன் வயோதிகனாகத் தோன்றி நக்கீரனுக்குக் காட்சியளித்த இடம் பழமுதிர்ச்சோலையாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்