கவிதைக்கான இதழாக உள்ளுறை வெளிவருகிறது. இன்றைய கவிஞர்களின் கவிதைகளை வாசகர்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை இந்த இதழ் வெளியாகிறது.
இந்த உள்ளுறை இதழில் கவிஞர்களின் கவிதைகள் மட்டுமல்லாமல், கவிதை பற்றிய கட்டுரைகள், கவிதை நூல் மதிப்புரைகள், புதிய கவிஞர்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றுக்கு உள்ளுறை களம் அமைத்துத் தருகிறது.
தமிழில் இதுவரை வெளிவந்த கவிதை இதழ்களின் தொடர்ச்சியாகவும், தேர்ந்ததாகவும் உள்ளுறை விளக்கும்.
இதன் சிறப்பாசிரியர் கால சுப்ரமணியம். ஆசிரியர் மோகன ரவிச்சந்திரன்.
தனி இதழாக வாங்கினால் இதன் விலை ரூ.10. ஆண்டு சந்தா ரூ.100 ஆகும்.
வேண்டியபோது இன்பம் விளைவிக்கும் மடந்தையரைத் தீண்டிய கையால் என்னைத் தீண்டாதே - பாண்டியா முல்லைக்கு அதிபா முகம் பார்த்து அகல நின்று சொல்லக் கடவதெல்லாம் சொல்.
கலையால் முலை மூடிக் கண் வலைக்கு உள்ளாக்கும் விலைமாதர் தாம் வர விட்டாரோ - விலைமாதர் கொங்கையிலே தோய்ந்த குறை தீர்த்து உய்ய சிவ கங்கையிலே நீராடி வா.