சூரியகிரகண‌ம் : காளஹஸ்தியில் சிறப்பு அபிஷேகம்

செவ்வாய், 20 ஜனவரி 2009 (11:28 IST)
வருகிற 26-ந் தேதி சூரிய கிரகணத்தன்று ஸ்ரீகாளஹஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவில் வழக்கம் போல் திறந்து இருக்கும், கோவில் நடை சாத்தப்பட மாட்டாது என்று கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

இது கு‌றி‌த்து கோ‌யி‌ல் தேவ‌ஸ்தான அ‌திகா‌ரிக‌ள் கூறுகை‌யி‌ல், "சூரிய கிரகணத்தையொட்டி சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.

நவகிரகங்களை கவசமாக அணிந்துள்ள ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரை சூரிய கிரகணத்தின் போது தரிசனம் செய்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். ஆகவே அன்று முழுவதும் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெறும்'' எ‌ன்று தெரிவித்து உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்