சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த இடங்கனசாலை புவன கணபதி தெருவைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரதுமகள் வினுப்பிரியா. தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரின் புகைப்படங்கள், மார்பிங் மூலம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு, பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சுரேஷ், அவர் தான் ஃபேஸ்புக்கில் மார்பிங் செய்து வெளியிட்டது என்பதை ஒப்புக்கொண்டார். மேலும் புகார் அளிக்க சென்ற வினுப்பிரியாவின் அப்பாவிடம் காவல் துறையினர் லஞ்சம் கேட்டது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும், அது உறுதியானால் அந்த காவல்துறை அதிகாரி பணி நீக்கம் செய்யப்படுவார் என்றும் காவல்துறை துணை ஆணையர் கூறினார்.