கொரோனா தடுப்பூசி… இரண்டாவது டோஸ் போடாமலேயே வந்த அதிர்ச்சி தகவல்!

செவ்வாய், 7 டிசம்பர் 2021 (10:21 IST)
மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா தடுப்பூசி போடாத நிலையிலேயே அவர் போட்டுக்கொண்டதாக குறுஞ்செய்தி வந்தது அதிர்ச்சி அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகளாக செலுத்தப்படுகிறது. முதல் டோஸூக்கும் இரண்டாவது டோஸுக்கும் இடையே 84 நாட்கள் இடைவெளி கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தனது முதல் டோஸை ஆகஸ்ட் 10 ஆம் தேதி போட்டுக்கொண்டுள்ளார். ஆனால் இரண்டாவது டோஸ் ஊசியை வெளியூரில் இருப்பதால் போட்டுக்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் டிசம்பர் 4 ஆம் தேதி அவர் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அவருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவின் இணையதளத்துக்கு சென்று பார்த்துள்ளார். அதிலும் அவர் ஊசி போட்டுக்கொண்டதாக சான்றிதழ் பதிவேற்றப் பட்டு இருந்தது. இது சம்மந்தமாக அவர் தன்னுடைய சான்றிதழை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்